Vijayakumar DCSE.,D.T.Ed.,B.A(English) - Search engine optimization (SEO) is a website promotion strategy, the goal of which is to get your site to appear at the top of search engine results under keywords or phrases appropriate to your business.

M.Vijayakumar (SEO Analyst)

Experts in Search Engine Marketing, Web optimization, Internet Marketing, Web consultant Chennai, Experts in Search Engine Marketing, SEO Analyst Chennai, SEO Expert Chennai,SEO Specialist Chennai, Web optimization, Web consultant Chennai, India. M.Vijayakumar DCE.,D.T.Ed.,M.A.,B.Ed.,

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வா, நேரடி போட்டித் தேர்வா? என்ற, பல மாத குழப்பம், ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

மே இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இதுகுறித்த விளம்பரத்தை விரைவில் வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கி உள்ளது.
யாருக்கு அனுமதி?
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது: மே மாத இறுதியில், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த உள்ளோம். இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட அனைவரும், இத்தேர்வில் பங்கேற்கலாம். ஏப்., 1, 2010க்கு பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களும், இத்தேர்வில் பங்கேற்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும், தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களும் எழுத வேண்டும். ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும், பி.எட்., படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கேள்வித்தாள் விவரம்
இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கேள்வித்தாள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்வித்தாள், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் அடிப்படையிலும் இருக்கும். பொது அறிவை சோதிக்கும் வகையிலான கேள்விகளும் இடம் பெறும், என கூறப்படுகிறது.
போட்டித் தேர்வு?
மே இறுதியில் தேர்வு நடந்ததும், உடனடியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, அடுத்த போட்டித் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, முடிவு எடுக்கப்படவில்லை.
ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்
நடப்பு கல்வியாண்டில், 28 ஆயிரத்து 201 ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில், 2,895 முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு போட்டித் தேர்வும், மற்ற ஆசிரியர்களுக்கு இரு வகையான தேர்வும் (தகுதித் தேர்வு மற்றும் முக்கிய போட்டித் தேர்வு) நடத்தப்படும்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள், அனைத்து தேர்வுப் பணிகளையும் முடித்து, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டில், காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாக பணியில் சேர்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு வாரியத்தின் மொத்த பணியாளர்கள் 14 பேர்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் முக்கியப் பொறுப்பு வாய்ந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைமை, மிகவும் பரிதாபமாக உள்ளது. வாரியத்தில், அதிகாரிகளைத் தவிர்த்து, அலுவலக பிரிவுகளில் வெறும், 14 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில்; மூன்று உதவியாளர் பணியிடங்களும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும், ஒரு சுருக்கெழுத்தர் பணியிடமும் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களே இல்லாத குறையையும் முதல்வர் போக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.
குறைந்தது, ஐந்து கணினி இயக்குனர்களை நியமனம் செய்ய, முதல்வர் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகள், பணியாளர்கள் விவரம்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர்-1, உறுப்பினர் - செயலர்-1, உறுப்பினர்-1, கூடுதல் உறுப்பினர் -2, கண்காணிப்பாளர்-2, உதவியாளர்-4, இளநிலை உதவியாளர்-3, தட்டச்சர்-3, ஸ்டெனோ-2.

More Info : http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=13043&cat=1


சென்னை: ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பில், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த தனித்தேர்வர்கள், முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளை எழுதியவர்கள்.
தேர்வு முடிவை, தேர்வெழுதிய மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று, தேர்வர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்து அறிந்துகொள்ளலாம்.
கருத்தியல் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் தேர்ச்சிப் பெற்றும், தேர்வு முடிவுகளில் பட்டயம் என்று குறிப்பிட்டிருக்கவில்லை எனில், சம்பந்தப்பட்டவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தரநிலை சான்றிதழ்களுடன், வரும் 4ம் தேதிக்குள், அரசு தேர்வுகள் இயக்ககத்தை அணுக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை: தேர்வெழுதுபவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும், டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் ஒரு குறைதீர்ப்பு மையம் திறக்கப்படும் என்று அதன் தலைவர் திரு.நடராஜ் தெரிவித்துள்ளார்.

More Info : http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12934&cat=1

சென்னை: தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில், 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

More info : http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12948&cat=1

சேலம்: இதுவரைக்கும், நம் கல்விமுறை, மாணவ, மாணவியருக்கு சரியான உற்று நோக்கலை தரவில்லை.
பனைமரத்தில் ஆண், பெண் என, இரு பிரிவு உண்டு என்பதையும், அதை எப்படி அடையாளம் காண்பது என்பதையும், மாணவர்களுக்கு கற்றுத் தரவில்லை. ஆனால், அதற்கு பதில் பனைமரத்துக்கான பொட்டானிக்கல் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசினார்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில், மாநில அளவில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நடந்தது.
இதில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது:
இங்கு ஒரு தடவை சிறப்புத் தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது.
மேல்நிலைக் கல்வியில் மாணவர் விரும்பிய குரூப் கொடுப்பதற்கும், 10ம் வகுப்பு மதிப்பெண்ணே அடிப்படையாக உள்ளது. இதனால் மாணவனுக்கு பிடித்த பாடம் ஒன்றாகவும், நாம் வழங்கும் பாடம் ஒன்றாகவும் உள்ளது. 450 மதிப்பெண் எடுத்தவர்கள் தமிழ் இலக்கியம் படிக்க விரும்பலாம். 250 மதிப்பெண் எடுத்தவர்கள் கணிதப் பாடத்தையும் விரும்பலாம்.
ஆனால், இதற்கெல்லாம், நமது தேர்வுக் குழு அனுமதிப்பதில்லை. இங்கு ஒரு தடவை சிறப்பு தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் போடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னைக் கேட்டால், பி.எச்டி., வரை ஆல் பாஸ் போட வேண்டும் என்பேன். கல்வி ஒரு அனுபவமாக இருக்க வேண்டும். ஒரு கப்பலில் பயணித்தால், அதில் உள்ள அனைவரும் அடுத்த கரைக்கு செல்ல வேண்டும். அதில் சிலரை நடுவில் தூக்கி எறிவது, எந்த விதத்திலும் நியாயமாகாது.
இன்று நாட்டில் மிகப்பெரிய அதிகார சக்தியாக விளங்குவது அரசியல். அதற்கு அடுத்து, பணபலம் மிக்கவர்களாக தொழிலதிபர்கள். இந்த இரண்டிலும் இருப்பவர்கள், நம்மிடம் நல்ல மதிப்பெண் பெற்றவர்களா? நல்ல மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. நமது கல்வி முறையிலும் மாபெரும் பிரச்னைகள் உள்ளன. பத்தாம் வகுப்பில் மாணவனை, படி,படி என விரட்டிவிட்டு, 11ல் ப்ரீயாக விட்டு விடுகிறோம்.
மீண்டும், 12ம் வகுப்பில் விரட்டுகிறோம். அதேபோல், பிளஸ் 2 பாடம், ஒரு கல்வியாண்டுக்காக, அதாவது ஜூனில் ஆரம்பித்து, மார்ச் வரை நடத்த தயாரிக்கப்பட்டது. பத்து மாதத்துக்கு புத்தகம் எழுத வேண்டியது. பின் அதை, ஆறு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டியது; அதையும் அபிஷியலாகவே முடிக்கிறோம், அதுதான் வேடிக்கை. நீதிமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியுமா? எவ்வளவு பைத்தியக்காரத்தனம் பாருங்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் ஆசிரியர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, சேலம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியல் வெளியீடு-07-09-2011 

 

http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=11460

 



Directorate  of Employment  and Training
Information on Cut-off  Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu


                                                       http://www.tn.gov.in/employment/


Various teachers associations have been thanking CM Jayalalithaa for issuing order to appoint 33, 000 teachers in the government schools.

http://thatstamil.oneindia.in/news/2011/08/29/33-000-teachers-be-appointed-teachers-aid0128.html

My site ranks first in Google... How? check it out here..


http://tnresults.nic.in

http://dge1.tn.nic.in

http://dge2.tn.nic.in

http://dge3.tn.nic.in


Tamil Nadu Exam Results 14 May 2010 ... Exam Results, Tamil Nadu Results, Results 2010, CBSE Class 12th Results, CBSE Class 10th results, Examination Results, HSSC Exam results Tamil Nadu Exam results, ...Read more...

Refer: http://dge2.tn.nic.in/

http://tnresults.nic.in/

http://tnresults.nic.in/hsc/hsc.htm

http://www.pallikalvi.in/

 All the Best.........

Visitor's Track

Social Bookmark

Bookmark and Share

About this blog

About Me

My Photo
chennai, tamilnadu, India
I had Create a blog. This is useful For Tamilnadu Colleague. Working In SEO(Search Engine Optimizer).

Total Visitors

Blog Archive

M.Vijayakumar (SEO Analyst Chennai)

Amazon SearchBox

Vijayakumar Facebook

Blog Archive